விவசாய கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி... திருவண்ணாமலையில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


எதிர்பாராத விதமாக தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், நாகப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை . இவருக்கு  திருமணமாகி மனைவி மற்றும் பிரதீஷ் (8) என்ற மகளும் உள்ளனர். தாய் தந்தை திருப்பூரில் வசிக்க பிரதீஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.

அவரது பாட்டி வேலை செய்வதற்காக அங்குள்ள வயல் பகுதிக்கு பேரனுடன் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்  சிறுவனின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து  வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A boy dies after falling into a farm well


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->