கிணற்றில் மிதந்த பிறந்து 3 நாட்களேயான பச்சிளம் குழந்தை.! நாமக்கல் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து மூன்று நாட்களேயான பச்சிளம் குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று பிறந்து 3 நாட்களேயான பச்சிளம் குழந்தையின் உடல் மிதந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எருமைப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசியவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெயரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 3 day old baby floated in a well in namakkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->