திருப்பத்தூர் அருகே பரபரப்பு : விவசாயியை அறிவாளால் வெட்டிக்கொன்ற 17 வயது சிறுவன்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயியை 17 வயது சிறுவன் அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளைக்குட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி என்ற சோழன் (62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் சோழன் நேற்று காலை விவசாய நிலத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது மகேந்திரனுடைய 17 வயது மகன் சோழனை வழி மறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சோழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து உயர்ந்த சோழனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மகேந்திரன் மற்றும் அவரது மகனை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 17 year old boy who murder a farmer with a sickle in tirupattur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->