9ம் வகுப்பு மாணவி தற்கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திருப்பாலை மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மணிராஜன். இவருக்கு 2 மகள்களும் உள்ளனர்.  வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர்  கடந்த சில நாட்களுக்கு முன்  சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந்நிலையில், அவரது இளைய மகள் வர்ஷினி நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமியின் தாய் 2 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 

தாய் மீது சிறுமிக்கு அதிகம் பாசம் இருந்ததால் 2 ஆண்டுகள் ஆகியும் அந்த சோகத்தில் இருந்து அவர் மீண்டு வராததால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

மேலும், அவர் தேர்வில் குறைந்த மதிப்பெண் வரும் என பயந்து கொண்டு இருந்ததாகவும் அதனாலும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9th Class Student Committed Suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->