நன்னடத்தை ஆணையை மீறிய நபருக்கு 93 நாள் சிறை தண்டனை - வருவாய் ஆர்.டி.ஓ உத்தரவு!
93 days jail sentence for violating probation order
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த பாபு என்ற லொட்டை பாபு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் பாபு மீது கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து, நன்னடத்தை ஆணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
English Summary
93 days jail sentence for violating probation order