கஷ்டப்பட்டு தான் படித்தேன்., காண்ட்ராக்டர் ஆக ஆசை... பணம் இல்லை.! 9 பெண்களை ஏமாற்றிய சிவில் எஞ்சினியரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் தெரு பகுதியை சார்ந்தவன் சக்கரவர்த்தி (வயது 34). இவனது பெயருக்கு ஏற்றார் போலவே இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி., பணம் மற்றும் நகைகளை வாங்கி சுகபோகத்தில் வாழ்ந்து வந்துள்ளான். 35 வயதை விட அதிகமாக உள்ள முதல் மணம் முடிக்காத பெண்கள்., இளம் வயதில் கணவரை இழந்து மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை குறிவைத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான். 

இந்த கொடூரத்தை அரங்கேற்றுவதற்கு திருமண இணையதளம் மூலமாக பதிவு செய்து கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து இந்த கொடூரத்தை தொடர்ந்து அரங்கேற்றி உள்ளான். இவனது பிடியில் சுமார் 9 பெண்கள் சிக்கியதை அடுத்து., அவர்களிடம் இருந்து செல்வங்கள் மற்றும் பதவி போன்ற அனைத்தையும் அடைந்து., பின்னர் அவர்களையும் நாடக காம காதல் ஆசையில் விழவைத்து., அவர்களின் கற்பை சூறையாடும் வந்துள்ளான். இவன் சென்னை., மதுரை., திருச்சி., திருவண்ணாமலை., கும்பகோணம் ஆகிய நகர்களில் இருக்கும் பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. 

இந்த கொடூரனிடம் சிக்கிய பெண்களில் இருவர் மருத்துவர்., நான்கு பேர் பொறியாளர்., ஒருவர் பிசியோதரப்பி மருத்துவர் மற்றும் இருவர் இளம் பட்டதாரிகள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் அவர்களின் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல நிலைமையில் இருந்து நன்மதிப்பை பெற்ற பெண்கள் மற்றும் கைநிறைய சம்பாதிக்கும் பெண்கள் ஆவார்கள். இந்த கொடூர செயலை செய்த கொடூரனும் அமைப்பியல் (Civil) துறையில் பொறியியல் பட்டம் வாங்கிய பட்டதாரி ஆவான். இவன் தன்னை இணையத்தில் கட்டிட மேற்பார்வையாளர் என்று அறிமுகம் செய்து பெண்களை மயக்கியுள்ளான். 

இவன் பல பெண்களை ஏமாற்றி வந்த நிலையில்., கடந்த 2017 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து., இவர்களுக்கு குழ்நதை ஒன்று உள்ளது. இவனின் கொடூர எண்ணத்தை அறிந்த பெண் தனது குழந்தையை தன்னுடன் அழைத்து கொண்டு கொடூரனை பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்றதை வசதியாக நினைத்த கொடூரன் மதுரையில் உள்ள பெண்கள் புகார் அளித்ததை அடுத்து சிறைவாசம் இருந்து வந்தான். இந்த சம்பவத்தை அடுத்து திருச்சியிலும் இவனது பெயரில் புகார்கள் பெறப்பட்டு திருச்சி சிறையிலும் கிடந்தான்.  

சிறை சென்றும் திருந்தாமல்., பெண்களை ஏமாற்றி அவர்களின் வயிறு எரிச்சலில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற குற்ற உணர்வும் இல்லாமல் சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்த பெண் மருத்துவரை வலையில் விழ வைத்துள்ளான். அந்த பெண்ணிற்கு 38 வயதாகும் நிலையில்., உடல் பருமனை காரணம் காட்டி மணமகன் வீட்டார் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில்., மருத்துவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செய்தியை அறிந்துள்ளான். இதனையடுத்து அந்த பெண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆசை வார்த்தையை கூறியுள்ளான். 

இவனது ஆசை வார்த்தையில் விழுந்த மருத்துவர் பேச்சில் மயங்கி., திருமணத்திற்கு முன்னதாகவே கிண்டியில் இருக்கும் தனியார் விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருந்துள்ளான். மருத்துவரிடம் இருந்த ரூ.7 கோடியை திருமணம் செய்து கொள்வான் என்று எண்ணி பணத்தை கொடுத்த நிலையில்., அவரிடம் இருந்து பெற்ற பணத்தை வைத்து திருவண்ணாமலையில் வீடு வாங்கியுள்ளேன். சென்னையிலும் வீடு கட்டிய நிலையில்., புதியதாக மூன்று காரையும் வாங்கியுள்ளேன். மருத்துவரின் ஏக்கத்தை அறிந்து கொண்டு நாடகத்தை அரங்கேற்றிய கொடூரனுக்கு தனது சொத்துக்களை முழுவதுமாக எழுதி கொடுத்துள்ளார். 

மருத்துவரின் மொத்த சொத்துக்களை அபகரித்த நயவஞ்சகன்., உல்லாசத்தையும் கொண்டாடி பின்னர் மருத்துவரை பிரித்து., கும்பகோணம் பகுதியில் இருக்கும் பெண் பொறியாளரை தேடி அவருக்கு வலை வீசி., நாடக காதல் காம வலையில் விழ வைத்து ரூ.1.30 கோடியை பெற்றுள்ளான். இதுமட்டுமல்லாது அவருடனும் உல்லாசமாக இருந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து சென்னை மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு மேற்கூறிய அதிர்ச்சி தகவலானது கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் சக்கரவர்த்தி அளித்த வாக்குமூலமாவது., 

பொறியியல் துறையில் எம்.இ பயின்று முடித்துவிட்டு கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் தொழிலை விரும்பியதை அடுத்து என்னிடம் படிப்பு மட்டுமே இருந்தது., எனது திட்டத்தை நனவாக்குவதற்கு பணம் இல்லை. என்னுடன் பிறந்த சகோதரிகளும் ஏழ்மையில் இருந்ததை அடுத்து., எங்களிடம் இருந்த சொத்தை விற்பனை செய்தே பொறியியல் படிப்பு படித்தேன். இந்த நிலையில்., சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் தங்கியிருந்த சமயத்தில்., அரசு அதிகாரி ஒருவர் பெண்களிடம் இணையம் மூலம் ஏமாற்றும் திட்டத்தை எனக்கு கற்றுக்கொடுத்தார். இதன் மூலமாக அவரின் ஆலோசனைப்படி மதுரையில் இரண்டு பெண்களை ஏமாற்றி., அவர்களிடம் மொத்தமாக ரூ.1 கோடி வரை பெற்றேன். 

ஒருமுறை நான் கண்ட வெற்றியானது எனக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது., இதனையடுத்து நான் தொடர்ந்து பெண்களை ஏமாற்ற துவங்கினேன். என்னிடம் ஏமார்ந்த நான்கு பெண்கள் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., பிற பெண்கள் திருமணம் செய்து கொண்டு நலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் எனது மனைவியுடன் நான் மீண்டும் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினான். இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 woman cheated by a civil engineering student in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->