கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்.! தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 8 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அல்தாம்ஸ். இவரது மகள் ஆஷியா(8). இவர் வீட்டுக்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் இரவு விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி திடீரென தவறி விழுந்துள்ளார்.

இதில் நீரில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் டவுன் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 year old girl fell into the water tank and died in kirishnagiri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->