குடும்ப தகராறில் அரங்கேறிய சோகம்.. 8 மாத கர்ப்பிணி மனைவி அடித்தே கொலை..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சோபனா. சோபனா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது. 

இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக முற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மணிகண்டன் தனது மனைவியை தாக்கியுள்ளார். 

இதனால் நிலைகுலைந்த சோபனா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், சோபனாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். 

சோபனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 month pregnant girl murder by husband in Tiruvannamalai Chengam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->