பாலியல் தொல்லையால் தற்கொலை முயன்ற 7ம் வகுப்பு மாணவி.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்று வரும் 7ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மாணவியிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து கேட்ட அவரத் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியர் முரளி கிருஷ்ணா என்பவர் சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மேலும், அவரது முகவரியை கொடுத்து சிறுமியை வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7th Grade Student Committed Suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->