திருவாரூர் அருகே பரிதாபம்.! ஆற்றில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவன் பலி.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் நண்பர்களுடன் குளித்த போது ஆற்றில் மூழ்கி ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி பகுதியை சேர்ந்தவர் ஞானதுரை. இவரது மகன் விஜய் (13) ஏழாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் விஜய் பொங்கல் விடுமுறைக்காக திருவாரூர் மாவட்டம் கூந்தலூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, விஜய் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள அரசியல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த விஜய் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.

இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் இருந்து விஜயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜயை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எரவஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7th class boy drowned river in tiruvarur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->