திருச்சி : 781 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
781 kg Gutka products seized in Trichy
திருச்சி மாவட்டத்தில் 781 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் காமாட்சி பட்டி பகுதியில் விற்பனைக்கு குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சேகர் என்பவர் வீட்டின் அருகே லாரியிலிருந்து டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவதை பார்த்தனர்.
இதையடுத்து அந்த மூட்டையில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் குட்கா, பான் மசாலா போன்ற 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில் போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், விராலிமலை பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெள்ளைச்சாமி(23) மற்றும் கிளினர் சீனிவாசன்(25) என்பதும், லாரி ஓட்டுநருக்கு தெரியாமல் குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து டாட்டா ஏசி வாகனத்தில் புகையிலை பொருட்களை ஏற்ற வந்த ஓட்டுநர் திவாகர்(23) உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த 781 கிலோ குட்கா பொருட்களையும், இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
English Summary
781 kg Gutka products seized in Trichy