கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் குடியரசுதின விழா!
70 republic day celebrated in merina
இன்று இந்தியா முழுவதும் 70 வது குடியரசு தினம் கோலாகலமாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய கொடி ஏற்றப்பட்டதும் அனைவரும் வணக்கம் கூறி இந்திய தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மிகவும் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.
English Summary
70 republic day celebrated in merina