வீட்டு வாசலில் விளையாடிய சிறுமி ., சரிந்து விழுந்த நிலைவாசலால் பரிதாப பலி..! சோகத்தில் மூழ்கிய கிராமம்..!!
7 Years Old Baby Dead in Thanjavur
விளையாடி கொண்டிருந்த குழந்தையின் மீது கதவு விழுந்து பரிதாபமான உயிரிழந்தார்.
தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். ஸ்ரீதர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்நிலையில், சம்பவதன்று இரவு அவரின் இரண்டாவது மகள் பிரீத்தி அங்கு விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் பொருத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலை வாசல் அவர் மீது சரிந்து விழுந்து.
இதனை கண்ட அவரது பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
7 Years Old Baby Dead in Thanjavur