16 வயது சிறுவனின் காம வெறியாட்டத்தில் பலியான 6 வயது சிறுமி..! அரங்கேறிய படுபாதக சம்பவம்..!
6 years old girl abused and killed
திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர் அருகே வசித்து வரும் 6 வயது சிறுமி நேற்று மாலை இயற்கை உபாதை கழிக்கச் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பதறி போன பெற்றோர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது அந்த சிறுமி வீட்டின் அருகே இருந்த டிராக்டர் ஒன்றில் காயங்களுடன் கிடந்துள்ளார்.
இதை தொடர்ந்து, பொதுமக்கள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், சிறுமியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு, குற்றவாளியை தண்டிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், டிராக்டர் உரிமையாளர் உமா சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவனிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு விளையாட்டாக டிராக்டரில் போட்டதாகவும், அந்த சிறுமி தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்கள். 6 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
6 years old girl abused and killed