தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்... கோடியில் கொட்டும் அபராதம்.!!
6 lakhs case in 144
தமிழகத்தில் நேற்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,865 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 1,654 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 45,814 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் நேற்று மட்டும் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கோவிட்-19 - னால் பாதித்தவர்களில் இதுவரை 37,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 6.57 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7.14 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக ரூ.14.95 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 5.26 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.