விழுப்புரத்தில் பயங்கரம்.. காயங்களுடன், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்..!
56 year old woman murder
விழுப்புரத்தில் தலையில் காயங்களுடன் எறிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மனைவி இந்திரா. நடராஜன் திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகள் முன்பு ஒய்வு பெற்றார். இவர்களுக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தையில்லை.
இதனால் நடராஜன் திருக்கோவிலூர் சார்ந்த லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். லீலாவுக்கும், நடராஜருக்கும் வேலாயுதம் என்ற மகன் உள்ளார். இந்திரா தாம் இருக்கும் அதே பகுதியில் காய்கறி கடை மற்றும் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு நடராஜன் திருக்கோவிலூரில் உள்ள லீலா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன் தினம் காலை விழுப்புரம் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இந்திரா பிணமாக கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து,கதறி அழுதார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இந்திராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறை அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தனர்.
இந்திராவை கம்பிகளால் தாக்கி அதன் பிறகு துணிகளை அவர் மீது போட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். வட்டிக்கு பணம் விட்டு வந்ததில், ஏதேனு பிரச்சனை ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.