சென்னையில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் பேர்.. திணறும் தமிழக அரசு.!!
5000 chennai people apply to go hometown
உலகம் முழுவதும் கரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
இதனையடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டினை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு போகமுடியாமல் உள்ளனர்.
அவசரத் தேவை என்றால் வெளியூர் செல்ல தமிழக அரசு 7530001100 என்ற எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த எண்ணிற்கு பலர் தங்கள் அவசரமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் ஒரு மணி நேரத்தில் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
5000 chennai people apply to go hometown