தமிழகத்தில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
500 Kalaingar Unavagam coming soon in tamilnadu
நாடு முழுவதும் பட்டினி இல்லா நிலையை உருவாக்குவதற்கு சமூக சமையல் கூடங்களை அமைக்க வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தமிழகத்தில் 4 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் பதில் அளித்த தமிழக அரசு. ஏற்கனவே 654 சமூக சமையல் கூடங்கள் 'அம்மா உணவகம்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சுமார் 60 ஆயிரம் நபர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இனி தமிழகத்தில் ஒருவர் கூட பசியுடன் இரவு உறங்கப் போவதில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
500 Kalaingar Unavagam coming soon in tamilnadu