விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி.! டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் டிராக்டர் மோதி 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே திடீர் புரம் அன்னாவரம் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் இலக்கியா(5). இந்நிலையில் சிறுமி இலக்கியா வீட்டின் அருகே உள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென சிறுமி இலக்கியா மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 year old girl killed in tractor collision in tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->