#திருவள்ளூர் || ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்.! 2 இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கோலப்பஞ்சேரி சோதனைச் சாவடியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காரில் இருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரணை செய்ததில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உசேன் (22) மற்றும் ஜெகன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் காரில் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்பு இவர்கள் இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 lakhs worth gutkha seized and 2 Youths arrested in Tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->