ரயில் பயணிகளுக்கு உற்சாக செய்தி.! தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
40 special train in chennai
தமிழகத்தின் தலைநகர் சென்னை பகுதியில் மத்திய, மாநில அரசுடைய அனைத்து தலைமை அலுவலங்களும் இருக்கின்றனர். அதுபோல தனியார் நிறுவனங்களின் தலைமை அலுவலங்களும் அங்கு தான் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஐடி ஊழியர்கள் அதிக அளவில் சென்னையில் இருக்கின்றனர்.
இத்தகைய சூழலில், கொரோனா அச்சத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக 204 சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 40 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே மூத்த அதிகாரி, கொரோனா அச்சத்தினால், அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக, முதற்கட்டமாக 150 சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால் , அதன் சேவை போதுமானதாக இல்லை எனவே., தற்போது 204 மின்சார ரயில் சேவை இயக்கப்பட இருக்கின்றது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
English Summary
40 special train in chennai