ராணிப்பேட்டை: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 4 பெண்கள் உட்பட 9 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பாலாற்றில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.

வந்தவாசியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று ஆற்காடு வழியாக வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஆற்காடு அடுத்த பூங்கோடு அருகே பேருந்து சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலாற்றங்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். மேலும் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்து கவிழ்ந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 woman including 9 injured in private bus accident in ranipet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->