உடுமலை அருகே ஆம்னி வேன்-டெம்போ மோதி விபத்து.! சிறுமி உட்பட 4 பேர் பலி - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே டெம்போ மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரசிதா பேகம். இவரும், இவரது மருமகள் பானு மற்றும் பேத்தி சஸ்மிதா, பேரன் இஸ்மாயில் ஆகிய நான்கு பேரும் உடுமலையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்பு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வாடகை ஆம்னி வேனில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரம் அருகே சென்ற போது வேன் எதிரே வந்த டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 3 பெண்களும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த சிறுவன் இஸ்மாயில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 killed in Omni van tempo collision in near Udumalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->