4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமான மழை..!
4 days rain for tamilnadu
தமிழகத்தில் மேலும் அடுத்து நான்கு நாட்களுக்கு இன்னும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று, சென்னையில் சில பகுதிகளில் கனமழை கொட்டியது. இதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64 சதவிகிதமும், பெரம்பலூர் மாவட்டத்தில் 28 சதவிகிதம் குறைவாகவும் மழை பெய்துள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
English Summary
4 days rain for tamilnadu