சென்னையில் நாளை 32 ரயில் சேவை ரத்து.. முழு விவரம் உள்ளே.!
32 rail service canceled for chennai
சென்னை - செங்கல்பட்டு இடையே நாளை 32 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுரத்து.
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் - கூடுவாஞ்சேரி இடையிலான ரயில் பாலத்தில் கட்டுமான பணியை மேற்கொள்வதாலும், ஒட்டிவாக்கம் - செங்கல்பட்டு இடையிலான சுரங்கப் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாளை தாம்பரம் - செங்கல்பட்டு ஆகிய வழியே சொல்லும் 7 புறநகர் ரயில்கள் மற்றும் 32 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுரத்து.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில்.
சென்னை கடற்கரையில் இருந்து 8.25 மணிக்கு மேல்மருவத்தூர் புறப்படும் ரயில்.
மேல்மருவத்தூரில் இருந்து 11.30 மணிக்கு விழுப்புரம் புறப்படும் ரயில்.
விழுப்புரத்தில் இருந்து பகல் 1.50 விழுப்புரம் செல்லும் ரயில்.
மேல்மருவத்தூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்.
விழுப்புரத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு தாம்பரம் ரயில்.
தாம்பரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு விழுப்புரம் புறப்படும் ரயில்.
ஆகிய ரயில்கள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை காலை 9.55 மணிக்கு மணி முதல் பகல் 1.45 வரை 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
32 rail service canceled for chennai