பலத்த காற்றுடன் கனமழை.. சென்னையில் 31 விமானங்களின் சேவை பாதிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. 

சென்னையில் வானம் மாலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.  இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை காலை அதிகாலை 4 மணி வரை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் குளிர்ச்சியான சூழலை நிலவுகிறது. 

 

இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஜெர்மனி, தோகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின. மலேசியா, தாய்லாந்து, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் தத்தளித்தது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 flight delay in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->