திருச்சி || லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்.. தலை நசுங்கி 3 வயது சிறுவன் பலி..! - Seithipunal
Seithipunal


லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் . இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சுரேஷ் அவரது மகன் லித்திஸுடன் காளிப்பட்டி கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு செங்கல் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியதில் சுரேசும், அவரது 3 வயது மகனும் லாரியின் பின் சக்கரத்தில் வீழ்ந்தனர்.

இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி லித்திஸ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Years old boy death in Accindet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->