ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை..!! விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர்..!!
3 suicides from the same family
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், காரியாப்பட்டியில் வசித்து வருபவர் சந்திர கோபால். இவருக்கு திருமணமாகி மகேஷ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சந்திரகோபாலுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் குடும்பமே மன உளைச்சலில்ல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவதன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. நெடு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கதினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, மூவரும் தூக்கில் தொங்கிய படி பிணமாக இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 suicides from the same family