குடிபோதையில் தகராறு: விவசாயிக்கு கத்திக்குத்து - 3 பேர் கைது - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் உப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (36). அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து (48). இவர் நேற்று குடிபோதையில் அப்துல் ரகுமான் வீட்டு வாசலில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து அப்துல் ரகுமான் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் இது குறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அப்பொழுது மாரிமுத்துடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் மாரிமுத்துவை கத்தியால் குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விவசாயியை கத்தியால் குத்திய அப்துல் ரகுமான் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people arrested for stabbing a farmer in a drunken dispute in tiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->