குட்டையில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு., சோகத்தில் மூழ்கிய கிராமம்..! - Seithipunal
Seithipunal


குட்டையில் குளிக்க சென்ற சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் போந்தை கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கலையரசி மற்றும் ஹேமாவதி என்ற இரு மகள்கள் உள்ளனர்.  இவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர் நிலையில் நேற்று அவர்களின் விளை நிலத்தில் நெல் அறுவடைப் பணி நடைபெற்றது.

அந்த பணியில் தாய்க்கு உதவி செய்வதற்காக மகள்கள் இருவரும் தங்கள் தோழிகளுடன் வயலுக்கு வந்தனர். வேலை முடிந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள குட்டையில் குளிக்க செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சிறுமிகள் மூவரும் சென்றனர். அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினர்.

நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மூவரையும் தேடி குட்டைக்கு சென்றனர். அங்கு சிறுமிகள் மூவரும் தண்ணீரில் விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்க சென்ற மூன்று சிறுமிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 girls drowned in a puddle


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->