மச்சான் நான் சாக போறன்.! நாங்களும் வரோம்., ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட உயிர் நண்பர்கள்.!
3 FRIENDS ATTEMPT SUICIDE
திருவாரூர் அருகே தனியாக நண்பன் தற்கொலை செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ளாத உயிர் நண்பர்கள் இருவர், நண்பனோடு சேர்ந்து மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று நண்பர்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம்: நீடாமங்கலம் அடுத்து உள்ள கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயம் செய்துவரும் இவருக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். 26 வயதை கடந்த ஆனந்த் அவருடைய நண்பர்கள் அசோக்குமார், ஆசைத்தம்பி ஆகியோருடன் இணைந்து வேலை எதுவும் செய்யாமல், ஊரை சுற்றி வந்துள்ளனர்.
திருமணம் ஆகாத இந்த இணைபிரியாத நண்பர்கள், கையில் கிடைக்கும் பணத்தை வைத்து ஒன்றாக மது அருந்தி அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளனர். மகன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுவதை அடிக்கடி கார்த்திகேயன் கண்டித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று மகன் ஆனந்தை அழைத்து, தந்தை கார்த்திகேயன் மது அருந்துவது குறித்தும்M ஊர் சுற்றுவது குறித்தும் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த் நேற்று இரவு தனது உயிர் நண்பர்களான அசோக்குமார், ஆசைத்தம்பி உடன் மது அருந்த சென்றுள்ளார்.
அப்போது தனது நண்பர்களிடம் நான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட உயிர் நண்பர்கள் இருவரும், "நீ மட்டும் தனியாக தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்., வா நாம் 3 பேரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளவோம்" என்று கூறி வாங்கி வந்த மதுவில் பூச்சி மருந்தை கலந்து மூன்று பேரும் கொடுத்துள்ளனர்.
மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த கிராமத்து மக்கள், 3 பேரையும் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி ஆனந்த் உயிரிழந்து விட்டார். அவர் நண்பர்கள் அசோக்குமா,ர் ஆசைத்தம்பி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 FRIENDS ATTEMPT SUICIDE