சென்னை, செங்கல்பட்டை தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்பை சந்திக்கும் மாவட்டம்.. பீதியில் மக்கள்..!!
25 corona positive in thiruvannamalai
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,438 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 49 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 33,244 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,295 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 793 ஆக அதிகரித்துள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
English Summary
25 corona positive in thiruvannamalai