24 கேரட் தங்கம் பாதி விலை தான்... சிக்கிய மோசடிக்கும்பல் தம்பதி.. மற்றொருவனுக்கு வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மாணிக்கம் மற்றும் கயல்விழி. கணவன் மனைவியான இவர்கள் இருவரும், வங்கியில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளனர். இவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் சிங்கப்பூரிலிருந்து குறைந்த விலையில், 24 காரட் மதிப்புள்ள தங்கம் பாதி விலைக்கு தருவதாக  தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் ஆசையாக பேசி பணமும் வசூல் செய்த நிலையில், இப்படியாக 30 பேரிடம் ரூபாய் 3 கோடி வரை வசூல் செய்துள்ளனர். மேலும், பணம் இல்லாதவர்கள் நகையாக தரலாம் எனவும், நகையை அடகு கடையில் பணியாற்றிய அகிலன் என்பவரிடத்தில் கொடுக்கச் சொல்லியுள்ளனர். 

இதனை நம்பிய அப்பாவி பெண்களும் நகையை கொடுத்த நிலையில், மொத்தமாக சுமார் 500 சவரன் நகைகள் கொடுத்துள்ளனர். இதனைப்பெற்றுக்கொண்ட மோசடி கும்பல், உத்தரவாதமாக பத்திரமும் எழுதி கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், பணம், நகைகள் தேவையான அளவு சேர்ந்ததும் மாணிக்கம் - கயல்விழி தம்பதி மற்றும் அகிலன் மதுரைக்கு தப்பிச் சென்றுள்ளனர். மதுரையில் சிறிது காலம் தங்கியிருந்து பலரை ஏமாற்றிய நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

மதுரை மற்றும் காரைக்கால் காவல் துறையினர் கடந்த 7 மாதமாக இவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், கயல்விழி - மாணிக்கம் தம்பதி திருப்பூரில் இருப்பதாக தகவல்  கிடைக்கவே, தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அகிலனை தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 Carat Gold Half Rate Fraud Couple Arrest By Police 19 December 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->