பெற்றோர் சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்து கொண்ட இளம் பெண்.! ஒரே வருடத்தில் உயிரிழப்பு..கதறி கதறி அழுத பெற்றோர்.!
21 old age women suicide for family problem
தஞ்சாவூர் மாவட்டம் கீழமணக்குடி திருவடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் நிஷாந்தி இவரது கணவர் பெயர் சின்ராசு. இவர்கள் இருவரும் கடந்த 26 .9 2018 ஆம் ஆண்டு நிஷாந்தி பெற்றோர் வீட்டில் சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நகை பணம் கேட்டு நிஷாந்தியின் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததால் நிஷாந்தி 27.2.2020 ஆம் தேதி காலையில் தூக்கு போட்டு தற்கொலை கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்க்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு மதியம் 1 மணிக்கு சேர்த்தபோது நிஷாந்தி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி நிஷாந்தியின் தந்தை உத்திராபதி பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்களது சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு திருமணமான ஒரு வருடத்தில் நிஷாந்தி உயிரிழந்து சடலமாக கிடப்பதை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுகின்ற காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.
English Summary
21 old age women suicide for family problem