60 வயது நபர் பெருசால், 20 வயது பெண்ணுக்கு விபரீதம்.! போலீசில் கதறும் தாய்.!
20 age girl married with 60 age men
20 வயது இளம்பெண்ணை ஜவுளிக்கடை உரிமையாளர் கடத்தி சென்று விட்டதாக இளம்பெண்ணின் தாயர் புகார்.
கிருஷ்ணகிரி தர்மராஜா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி இவர் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார், அதில் நான் கணவனால் கைவிடப்பட்ட பெண் எனக்கு இருபது வயதில் சோனி என்ற மகள் உள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி வழக்கம்போல் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்ற எனது மகள் சோனி மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு தான் பணிபுரியும் ஜவுளிக்கடை உரிமையாளர் செல்வத்துடன் இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார்.
இதுதொடர்பாக நான் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதனைத்தொடர்ந்து ஜவுளிக்கடை உரிமையாளர் குறித்து விசாரிக்கையில் அவர் 60 வயது நபர் என்றும் திருமணம் ஆகாமல் பல பெண்களை ஏமாற்றி வருபவர் என்றும் தெரியவந்தது.
ஆகவே ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று என் மகளை அந்த நபரிடம் இருந்து மீட்டுத் கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
20 age girl married with 60 age men