ராணிபேட்டை : காதுகுத்துக்கு சென்ற இளைஞர்கள் பரிதாப பலி..!
2 Youth Died In Accident near ranipettai
டிப்பர் லாரி மோதி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிபேட்டை மாவட்டம், வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவர் அவரது பேரக்குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக சொந்தகிராமத்திற்கு அவரது குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆறு இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
English Summary
2 Youth Died In Accident near ranipettai