வேலூர் || வழி தவறிய 2 வயது ஆண் சிறுத்தை இறப்பு..!
2-year-old male leopard who lost his way died
ஆந்திரா வனப்பகுதிலிருந்து வழி தவறி வந்த சிறுத்தை பேர்ணாம்பட்டு அருகே நெல் வயலில் இறந்து கிடந்தது.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே சாரங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, வயது 50; விவசாயி. இவர் சாரங்கல் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார்.
துரைசாமி நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்தத்தகவலை அறிந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் சிறுத்தைக்கு, 2 வயது இருக்கும். ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வழி தவறி வந்தபோது இறந்துள்ளது. 'பிரேத பரிசோதனைக்கு பிறகு தான், சிறுத்தை எப்படி இறந்தது என தெரியவரும்' என்று தெரிவித்தனர்.
.
English Summary
2-year-old male leopard who lost his way died