தஞ்சாவூர்: ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 மாணவர்கள்.! சேற்றில் சிக்கி உயிரிழப்பு.!
2 students bathing in the river got stuck in the mud and died in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே, வள்ளிகொல்லைகாடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் வைரமுத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர் வைரகுமார் ஆகியோர் நண்பர்களுடன் நேற்று மதியம் கருங்குளம் நசுவினி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்பொழுது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிய வைரமுத்து மற்றும் வைரகுமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், உயிரிழந்த இரண்டு மாணவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 students bathing in the river got stuck in the mud and died in Thanjavur