நள்ளிரவில் வீட்டிற்கு வந்து, தாயிடம் அத்துமீறிய குடிகார மகன்கள்.! ஈரோடு அருகே., பரபரப்பு.!
2 son killed these mother in midnight
வெறும் இரண்டாயிரம் ரூபாய் பணத்திற்காக போதையில் பெற்ற தாயையே அடித்துக்கொன்ற இரு மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வ.உ.சி தெருவை சேர்ந்த கணேசன் மற்றும் சரோஜா தம்பதியருக்கு விக்னேஷ் (27) மற்றும் அருண்(23) என்ற இரு மகன்கள் உள்ளனர். தந்தை கணேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். விக்னேஷ் ஓட்டுனராகவும், அருண் ப்ளம்பராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விக்னேஷ், அருண் ஆகிய இருவரும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிலே வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை தேடி உள்ளனர். எவ்வளவு தேடியும் பணம் கிடைக்கவில்லை. ஆகையால், பணம் குறித்து தங்கள் அம்மாவிடம் கேட்டுள்ளனர். பணத்தை செலவு செய்துவிட்டதாக சரோஜா கூறியுள்ளார். இதனால் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த இரு மகன்களும், இரும்புக்கம்பியால் சரோஜாவை அடித்து உள்ளனர். வலித்தாங்காமல் சரோஜா கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். இதனை பார்த்த மகன்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, ஒரு தனியார் அவசர ஊர்தியில் ஏற்றி சென்றனர். இதைப்பற்றி காவல்துறையினருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு சூரம்பட்டி சுடுகாட்டில் இரண்டுபேர் நின்று கொண்டு இருப்பதாக தகவல் கிடைக்க உடனடியாக அங்கே சென்ற காவல்துறையினர் விக்னேஷ் மற்றும் அருண் இருவரிடமும் விசாரித்தனர்.
அந்த விசாரணையில் மகன்கள் இருவரும் தாக்கியதால் தான் சரோஜா உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து சரோஜாவின் உடலை தோண்டி எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி முன்னிலையில் நேற்று மாலை சரோஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர், சரோஜாவின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி காவல்த்துறையினர் விக்னேஷ், அருண் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 son killed these mother in midnight