திருநெல்வேலி : பிறந்த குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரி (38). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தையை அதே பகுதியை சேர்ந்த கற்பகவள்ளி என்பவர் வேறு ஒருவருக்கு விற்க முயன்றுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சமவெளிடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து குழந்தையின் தாய் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் குழந்தையை விற்க முயன்ற தாய் யோகேஸ்வரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கற்பகவள்ளி ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணையில் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people including the mother who tried to sell the newborn baby were arrested in tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->