தூத்துக்குடியில் பரபரப்பு: கூலிதொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது.!
2 people including a boy arrested for murder a laborer in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் கூலித்தொழிலாளியை 16 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கிருபை நகர் பகுதியில் சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டி(60). இவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை முனியசாமிபுரம் பகுதி அருகே பாண்டியை மர்ம நபர்கள் கத்திய குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், செல்சினி காலனியை சேர்ந்த பிரபாகரன்(26) என்பவர், 16 வயது சிறுவனுடன் சேர்ந்து பாண்டியை பழைய இரும்பு பிளாஸ்டிக் சேகரிப்பதை குறித்து கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் பாண்டி இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த இரண்டு பேரும் கத்தியால் பாண்டியை குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரன் மற்றும் சிறுவனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
2 people including a boy arrested for murder a laborer in Thoothukudi