7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது மகன் ஹரிஹரன்(21). இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும், ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஹரிஹரன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people including a 17 year old boy arrested for sexually harassing a 7th class girl in Salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->