2 மாத குழந்தையை பேத்தி என்றும் பாராமல், கதறி துடிக்க வைத்த கொடூரம்.!
2 month baby killed by grand mother
கிருஷ்ணகிரி அருகே போச்சம்பள்ளி அடுத்த பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்த யோசிராஜா என்பவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு ஸ்ரீமதி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சத்தியா இரண்டாவது பெண் குழந்தையை சமீபத்தில் பெற்றெடுத்தார்.
சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஆன மங்கை மாதாமாதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருகை புரிவது வழக்கம். அந்த வகையில் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என சத்யா வீட்டிற்கு சென்று கேட்க அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதன்காரணமாக சந்தேகமடைந்த செவிலியர் விசாரிக்க குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இது குறித்து தகவல் காவல்துறையினருக்கு சென்றது. விசாரணையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
யோசிராஜாவின் தாயாரான பொட்டியம்மாள் குருணை மருந்து கொடுத்து குழந்தையை கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பொட்டியம்மாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
2 month baby killed by grand mother