பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.! 3 பேர் கைது - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் துறையினருக்கு குட்கா மற்றும் போதைப் பொருட்கள் இருசக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் பெரியபாளையம் பஜார் வீதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமளிக்கும் விதமாக பெரிய மூட்டையுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கொடுத்த தகவலின் படி குடோனில் பதிக்க வைத்திருந்த ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ஈஸ்டர் பவுடர் ராஜ், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி, மேனிகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 lakha worth gutkha seized in tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->