சிறுமியுடன் திருமணம்.. ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக, கதறிய சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் கோவிலூர் தோப்புபட்டி பகுதியைச் சார்ந்தவர் சார்ந்த தம்பதியின் 15 வயது மகள், ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவியின் மூத்த சகோதரியான நதிவதனாவிற்கும், சின்ன தாராபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், நதிவதனாவிற்கும் - அவரது மாமியார் காளீஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், நதிவதனா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், இந்த விஷயம் வடமதுரை காவல் நிலையத்தில் நதிவதனா அளித்துள்ள புகாரில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தனது பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையை, எனது கணவரின் வீட்டிற்கு விருந்து என்று கணவரின் தாய் காளீஸ்வரி அழைத்து வந்தார். 

பின்னர் எனது கணவரின் சகோதரருக்கு, என் தங்கையை திருமணம் செய்து வைத்துக்கொண்டனர். ஊரடங்கு காரணமாக இது குறித்து புகார் அளிக்க இயலவில்லை. எனது கணவர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் தமிழரசன், மாமியார் காளீஸ்வரி ஆகியோரின் மீது நடவடிக்கை எடுத்து, எனது தங்கையை மீட்குமாறு கூறிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து, கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக சிறுமிக்கு தமிழரசன் தாலிகட்டும் வீடியோவையும் வழங்கியுள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளீஸ்வரி மற்றும் செல்வம் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நிலையில், மனைவியின் உதவியுடன் சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 

மேலும், கணவர் செல்வத்தின் சகோதரர் தமிழரசன், நதிவதனாவின் தங்கையை விரும்பியுள்ளார். படிப்பு முடித்த பின்னர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அறிவுரை கூற வேண்டிய இடத்தில் இருந்த சிறுமியின் தங்கையும், சிறுமியின் வாழ்க்கையை காப்பாற்றுவதாக நினைத்து, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதாக கூறிய வார்த்தையை ஏற்று இரு வீட்டார் ஏற்பாட்டில் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தற்போது கணவருடன் சண்டை ஏற்பட்டு, மாமியாரின் தொந்தரவு காரணமாக தாயாரின் இல்லத்திற்கு வந்ததை அடுத்து, கணவரின் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டு நதிவதனாவும் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்த இருவரது பெற்றோர்கள், அதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள், தமிழரசன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மொத்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 family members arrest due to child marriage in Dindigul


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->