மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள்.! குளத்தில் மூழ்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் சர்வின்(7). வீரமணியின் உறவினரான கோவையை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் லத்திஸ்(7). இன்று கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்திற்கு தங்கமணி மற்றும் வீரமணி குடும்பத்தினர் சென்றிருந்தனர்.

அப்பொழுது லத்தீஸ் மாற்றும் சர்வின் இருவரும் மீன் பிடிப்பதற்காக குளத்திற்கு சென்று உள்ளனர். அப்பொழுது இரண்டு சிறுவர்களும் திடீரென குளத்தில் மூழ்கியுள்ளனர். 

இதையடுத்து இவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் இரண்டு சிறுவர்களை மீட்டனர். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடமதுரை போலீசார், உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys drowned in the pond while fishing in Dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->