விழுப்புரம் || ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த தாம்பரத்திலிருந்து 22 ஐயப்பன் பக்தர்கள் தனியார் வேனில் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் சென்ற வேன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது திண்டிவனம் அடுத்த டி.வி நகர் அருகே இன்று அதிகாலை 5:15 மணியளவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டிவனம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த 18 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வேன் ஓட்டுநர் சந்திரசேகர் தூக்க கலக்கத்தில் வண்டியை பள்ளத்தில் விட்டது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 iyyappa devoties admitted in hospital due to accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->