அக்காவுக்கு அவசர திருமணம்.. தம்பி எடுத்த விபரீத முடிவு.! அதிரவைக்கும் பின்னணி காரணம்.!  - Seithipunal
Seithipunal


தாய் மற்றும் அண்ணன் திட்டியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் சஞ்சய் குமார் என்ற 17 வயது இளைஞர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த நவீன் பாலாஜி என்ற 24 வயது வாலிபருக்கு சஞ்சய்குமார் அக்கா மீது ஒருதலைக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டறிந்த சஞ்சயின் குடும்பத்தினர் உடனடியாக சஞ்சயின் அக்காவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்து இருக்கின்றனர். சஞ்சய் குமார் தனது அக்காவிற்கு மிகவும் சிறப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டு வந்துள்ளார். 

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்த காரணத்தால் அவருடைய ஆசை நிராசையானது. எனவே மன வேதனையில் இருந்த சஞ்சய் அவசர திருமணத்திற்கு காரணமாக இருந்த நவீன் பாலாஜி இடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நவீன் பாலாஜி சஞ்சய்குமாரின் அண்ணன் விக்னேஷிடம் சென்று புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் சஞ்சயின் தாய் மற்றும் சஞ்சய்குமாரை கண்டித்துள்ளார். எனவே, மனஉளைச்சலுக்கு ஆளான சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years boy suicide in peerkangaranai 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->