சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது.! கோபிசெட்டிபாளைம் அருகே பரபரப்பு
17 year old boy arrested for kidnapped a girl in erode
ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை கடத்திய 17 வயது சிறுவனை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களைத் தேடிய போது, போலீசாருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் சிறுவன், சிறுமியும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை எடுத்து விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமி மாயமான வழக்கை மாற்றி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
English Summary
17 year old boy arrested for kidnapped a girl in erode