காணாமல் போன சிறுமி சடலமாக கிடந்த அவலம்.. கதறி அழும் பெற்றோர்கள்..!  - Seithipunal
Seithipunal


மிழகத்தின், திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம் அருகே இருக்கும் வடக்கு நாகமங்கலத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அனுப்பி வைத்தார்கள். 

மேலும், இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்த அந்த சிறுமி,  11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி எனவும், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இவர் கடந்த 31ஆம் தேதி காணமால் போயிருக்கிறார். இதை குறித்து சிறுமியின் பெற்றோர்  மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்கள். 

இந்த நிலையில் அன்று காணாமல்போன அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார், அதனால் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 years old girl murder in trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->